மீண்டும் இந்திய மீனவர்கள் கைது!


இந்திய மீனவர்கள் நால்வர், ஒரு படகுடன் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செயயப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்வளத்துறையிடம் முறையான மீன்பிடி டோக்கன் பெற்று 562 விசைப்படகுகள் கடல் தொழிலிக்கு சென்றனர் அதில் தங்கச்சிமடம் அந்தோணியார் புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் அமலன் 40/19 என்பவருக்கு சொந்தமான IND TN 10 mm 110 என்ற என்னுள்ள விசைப்படகு நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இன்று (9/8/19) அதிகாலை 2.00 மணியளவில்  இலங்கை கடற்படையினர் மேற்படி விசைப்படகு மற்றும் படகில் இருந்த 4 மீனவர்களை கைது செய்து  காங்கேசன் துறைமுகத்தில் வைத்துவிசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். ரெனிஸ்டன் 40/19 தங்கச்சிமடம் ,முருகேஷன் 48/19 இராமேஸ்வரம், முனியசாமி 55 /19      இராமேஸ்வரம் , சுப்பை 65/19 இராமேஸ்வரம்ஆ கிய மீனவர்களே கைதாகியுள்ளனர்.

No comments