சிங்கள மாணவர்களுடன் வந்த சந்திரிகா?


முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம் பௌவுசி  சுவிஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்களும் பங்களாதேஸின் உயஸ்தானிகரும் இன்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்த்திற்குமான அலுவலகம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இதுவரையிலும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திராத றுகுணு பல்கலைக்ககழத்தின் 50 மாணவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்ததுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் 50 மாணவர்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தினையும் ஏற்படுத்தி வழங்கியிருந்ததுடன் அம்மாணவர்களை  ஆளுநருடைய வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினையும் வழங்கியிருந்தது.
இந்த றுகுணு மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்  ஆளுநர் அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு இன்று பிற்பகல் வருகைந்தந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சுவிஸ்லாந்து, நெதர்லாந்து தூதுவர்களுக்கும் பங்களாதேஸ் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோருடன் தமது அனுவங்களை பகிர்ந்து கொண்டனர்.

No comments