பறவை தாக்கியதில் முதியவர் பலி!

ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரமரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 75 வயதுடைய மார்வின் ஹஜோஸ் என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மார்வின் ஹஜோஸ் தனது வீட்டில் செல்லப் பிராணியாக பல பறவையினங்களை வளர்த்து வருகிறார்.

அதில் ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவையும் உள்ளடங்குகின்றது.

இப்பறவைக்கு இரை வைப்பதற்காக     மார்வின் ஹஜோஸ் சென்றபோது கால் தடுக்கி நிலத்தில் விழுந்துள்ளார்.

விழுந்த அவரை கஸ்சோவாரி என்கிற பறவை தாக்கியுள்ளது.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்வின் ஹஜோஸ் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments