அதிகாலையில் கோர விபத்து - சிறுவர் பெண்கள் உட்பட 10 பேர் பலி


இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹியங்கணை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று அதிகாலை 1.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் ஹயஷ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 3 சிறுவர்கள், 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மடக்களப்பு வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

No comments