வெளிநாட்டவர் 13 பேர் கைது!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் நுழைவிசையின்றி தங்கியிருந்த 13 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ – வடரப்பல பிரதேசத்தில் 6 பேரும் மற்றும் வெலிகட பிரதேசத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நைஜீரியா பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நவகமுவ பகுதியில் ஈரான் நாட்டவரும் , ரத்மலானை பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை – நெதிமால பிரதேசத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments