பிரித்தானியாவில் ஆரம்பமாகியது தமிழ்ச் சந்தை 2019

பிரித்தானியாவின் கரோ பகுதியில் தமிழ்ச் சந்தை நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக தமிழ் வணிகர்கள் ஒரு குடையின் கீழ் அணிதிரட்டி நடத்தப்படும் தமிழர் சந்தை நிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள வணிக நிலையங்களை உள்வாங்கி ஒரு திருவிழாவாக நடைபெற்றுவருகின்றது.

இன்று ஆரம்பமாகிய தமிழர் சந்தை 2019 ஆண்டு நிகழ்வு நாளை, நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இங்கு பெருவாரியான மக்கள் அணிதிரண்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வதுடன் அங்கு நடைபெறும் கலை நிகழ்வுகளையும் கண்டு களித்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்ச் சந்தை #British Tamil Chamber of Commerce #London Tamil Market #Tamil Market



No comments