முதலை கடித்ததில் 7 பிள்ளைகளின் தாயார் பலி!

முதலை கடித்து ஏழு பிள்ளைகளின் தயார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மட்டக்களப்பில் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் கடுக்காமுனைக் கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான இளையதம்பி நல்லம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை – வால்கட்டுகுளத்தில் குளிக்கச் சென்ற போதே நேற்று வெள்ளிக்கிழமை முதலை கடித்து உயிரிழந்துள்ளார்.

இப்பகுதியில் நீண்டகாலமாக மக்கள் நீராடச் செல்வது வழக்கம். முதல் முறையாக முதலை கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

#Crocodile Bite Women #Crocodile #Crocodile Bite

No comments