சிங்கம் கடித்துக் குதறியதில் எஜமான் பலி!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_NVfsPWDtS6NseX2krsWmviNeCgsrl3Qdq4e0ZG9waJ9JynkhIthfhvYCpGmGfiofIrjfuXJovJzUycQhiEOV_29RFxNjBHOD4WrYmzx00zsQGNBxneZEvs0GFO2U1p44V8Qft_JxhFtT/s1600/Michal+Prasek.jpg)
உயிரிழந்தவர் ஸ்லின் பிராந்தியத்தில் அமைந்து்ளள ஸ்டிசோவ் கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதுடைய மைக்கேல் பிராசெக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மைக்கேல் பிராசெக் தன்னுடைய வீட்டில் கூண்டுகள் அமைத்து 9 வயதான ஆண் சிங்கம் மற்றும் 2 வயதான பெண் சிங்கத்தை வளர்த்து வந்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkvt9p9nDXvC6XpjVf_s0_m4F2iRXApHyfAM4nPafE8Bq8jKYSofdrXSvMVy8cZIcyJJWvmoqXzflEeum2ENuRD95lSuJfAgTk2bBpn6gqCYMjn3hqqkUTLhjHlXjFxi6QfkChPcdJbjML/s1600/Michal+Prasek-6.jpg)
நேற்று முன்தினம் சிங்கங்களுக்கு உணவு வைப்பதற்காக கூண்டுக்குள் சென்றபோது அவரை ஆண் சிங்கம் கடித்துக்குதறியது. இதனால் சம்பவ இடத்திலேயே மைக்கேல் பிராசெக் உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மைக்கேல் பிராசெக்கின் உடலை எடுப்பதற்காக இரு சிங்கங்களையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqSr_ER-Ofg_jGi4FiGOeHg0FpYgIssqSyeh23uw7lKija8ET3SewLYaNGNG2K1HNnb6_RhhL_HKpbZxng0kPixOWt0lWYJxfzjoQm7HSTa9kyyb4IXNRD9EBJnI8Vnzjj8OJekmzK_uI4/s1600/Michal+Prasek-4.jpg)
மைக்கேல் பிராசெக் வளர்த்த சிங்கங்களுக்கு உரிய அனுமதிப் பத்திரம் பெற்றிருக்கவில்லை. இதனால் முன்னர் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgn_geTbCk4xPJG_WpiaXBUB2tHtZwk_6Bs-e4Rx1-i3ayG1Z9atZU9iK9dtKBJ-K3zdTeLYCJpX5DYo4q6jOOxQh5fjg6JYs9GgE22C1RKxF7kugBefHfXzu_svH9Zx_Pm_5Y2Sx6CuK0A/s1600/Michal+Prasek-5.jpg)
கடந்த ஆண்டு ஜூன் மாதம், மைக்கேல் பிராசெக், தன்னுடைய பெண் சிங்கத்துடன் நடை பயிற்சிக்கு சென்றபோது, அந்த வழியாக ஈருறுளியில் சென்ற நபரை சிங்கம் தாக்கியது. இதானல் அக்கிராமத்தில் பெரும் பிரச்சினை எழுந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.
Post a Comment