சுமந்திரன் இருக்கும் வரை விடிவில்லை: சங்கரி!


ஏம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். முன்னாள் போராளிகளையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் என, கடுமையாகச் சாடியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி.

இனியும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாது மக்களை வாழ விடுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில், ஊடகமொன்றுக்கு அளித்திருந்த செவ்வியில் “வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள்தான் ஆயுதப் போராட்டத்தை ஆரப்பித்தார்கள் என்றும், இராணுவத்தினரைவிட அதிகளவு பொதுமக்களை விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள்” என்றும் கூறியிருந்தீர்கள். அதனால் விடுதலைப் புலிகளும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோணத்தில் கூறியிருந்தீர்கள். இது அன்றைய அரசாங்கத்துகும் ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது.

தற்போது தங்களின் உயிருக்கு ஆபத்து எனக்கூறி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளையும் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றீர்கள். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வெளியில் வந்து சகவாழ்வுக்குத் திரும்பி தங்கள் குடும்பத்தினருடன் வாழும் முன்னாள் போராளிகளையும் சிறையில் தள்ளும் நோக்கோடு தங்கள் சகாக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நிலையில், எவ்வாறு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என, வீ.ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments