மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் நினைவிடம் புனரமைக்க முடிவு!

வட மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் பேரிணையத்தின் முன்னாள் பொதுமுகாமையாளரும் முன்னாள் தமிழத்தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சிவநேசன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 
முல்லைத்தீவு மலாவியில் நடைபெற்றது
.

சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் 6.3.2008 அன்று மாங்குளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவநேசன் அவர்களின் புகழுடல்  முல்லைத்தீவு மல்லாவி அணிச்சியன் குளம் பிரதேசத்தில் பிரத்தியேகமாக விதைக்கபட்டது.

சிவராத்திரி தினமான (அவர் இறந்த திதியில்)  04/03/2018 அன்று பாண்டியன்குளம் துணுக்காய் பனை தென்னை வள கூட்டுறவு சங்க பொதுமுகாமையாளர் திரு றொபின் அவர்களின் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் மாமனிதரின் திருவுருவ படத்திற்கு  மலர்மாலையினை மாமனிதரின் நீண்டகால நண்பரும் துணுக்காய் பிரதேச சபை தவிசாளருமான திரு அ .அமிர்தலிங்கம், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு அ . சஞ்சயன், பாண்டியன்குளம் துணுக்காய் பனை தென்னை வள கூட்டுறவு சங்க பொதுமுகாமையாளர், திரு றொபின்   பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர்,பாண்டியன்குளம் துணுக்காய் பனை தென்னை வள கூட்டுறவு சங்க காசாளர் மற்றும் மாமனிதரின்புதல்வன் திருகுமார் ஆகியோர்   அணிவித்தனர் அதனை தொடர்ந்து மருதங்கேணி பனை தென்னை வள கூட்டுறவு சங்க பொதுமுகாமையாளர் திரு பி.பிரேமதாஸ் அவர்களால் இறைவணக்கம் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாண்டியன்குளம் துணுக்காய் பனை தென்னை வள கூட்டுறவு சங்க பொதுமுகாமையாளர் திரு றொபின் அவர்கள் வட மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் பேரிணையத்தின் முன்னாள் பொதுமுகாமையாளரான  மாமனிதர் சிவநேசன் அவர்களின் கல்லறை அமைக்கும் பணிகள்  பிரதேச சபையினரின் அனுமதியுடனும் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடனும் எமது சங்கங்கள் ஆரம்பிக்க   இருப்பதாகவும்   தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  கலந்துகொண்டிருந்த பனை தென்னை வள கூட்டுறவு நிறுவன கூட்டுறவாளர்கள்,சங்கத்தின் பணியாளர்கள்,அங்கத்தவர்கள், உறவினர்கள்  மாமனிதரின் திருவுருவ படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினர்

No comments