சமூக வலைத்தளத்தில் முதல் முதலில் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தார் பிரித்தானியா மகாராணி!


பிரித்தானியா மகாராணி எலிசபெத் அவர்கள் சமூக வலைத் தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இலண்டன் அறிவியல் அருண்காட்சியகத்தில்  கணினியிலும், கணிதத்திலும் அறிஞரான சார்ல்ஸ் பாபேஜ், தம் மூதாதையருக்கு எழுதிய கடிதம் ஒன்று அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்குச் எலிசபெத் மகாராணி சென்றுள்ளார். அந்த நிகழ்வில் கலந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துள்ளார்.


அருங்காட்சியத்தில் வைக்கப்பட்ட சார்ல்ஸ் பாபேஜ் எழுத்திய கடிதத்தைப் படம் எடுத்து அரச குடும்பத்திற்குரிய உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் (Instagram) இல் பதிவேற்றம் செய்து பகிர்ந்துகொண்டார்.



No comments