மகளிர் தினத்தில் பிறந்த பெண் முக்குழந்தைகள்!

மகளிர் தினமான நேற்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு முதல் பிரசவத்திலேயே மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
மகம்மகோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்- சிந்து தம்பதியருக்கு மகளிர் தினமான நேற்று மூன்று பெண் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன.இரண்டு முழந்தைகள் 1.75 கிலோ எடையிலும் ஒரு குழந்தை 1.5 கிலோ எடையிலும் பிறந்துள்ளதாகவும் மூன்று குழந்தைகளும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

No comments