மக்கள் போராட்டம்:பாதையினை மாற்றிய மைத்திரி!


புத்தளத்தில் மக்களின் எதிர்ப்பினையடுத்து இலங்கை ஜனாதிபதி மைத்திரி  தனது பயணத்தை முற்றாக மாற்றியமைத்துள்ளார்.

புத்தளம் - அருவக்காடு கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், இன்று (22) புத்தளத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியைச் சந்திக்க வாய்ப்பளிக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், இன்றைய தினம், ஜனாதிபதி கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் பொலிஸார், இந்தப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றுள்ள போதிலும், அந்த ஆணையையும் மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இதனால் அப்பகுதியில், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பொலிஸாருடன், நீர் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் மைத்திரியின் பயண பாதை மற்றும் நிகழ்ச்சி நிரலும் மாற்றப்பட்டிருந்தது.

No comments