மலாவியில் வெள்ளப் பெருக்கு! 28 பேர் பலி!
ஆப்பிரிக்க நாடான மலாவியில் (Malawi) கனமழை தொடர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 28 பேர் இதுவரை பலியாகியதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக அந்நாட்டின் பேரிடர் நிர்வாகப்பிரிவு தெரிவித்தது.
புயலால், ஆறுகள் கரை புரண்டு ஓடி கிராமங்களைத் தண்ணீரில் மூழ்கடித்தன.அதனால் சில இடங்களில், மின்சார விநியோகம் தடைபட்டதோடு குடிநீருக்குப் பற்றாக்குறை உருவாகியுள்ளது.
Post a Comment