இருக்க ஒரு வீடின்றி அந்தரிக்கும் மக்கள் - பகட்டு வாழ்வில் எம்.பிக்கள்
கிளிநொச்சி- பாரதிபுரம் கிராமத்தில் 5 அங்கத்தவா்களை கெண்ட குடும்பத்திற்கு இன்றளவும் வீட்டுத் திட்டம் வழங்கப்படாத நிலையில், 10 வருடங்களாக குடும்பம் பல்வேறு அசௌகாியங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
நிரந்தரத் தொழில் இன்றி கூலிவேலைக்குச் சென்று குடும்பத்தை பராமரிக்கும் தலைவரால் வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களைப்போல் பல குடும்பங்கள் சொந்த நிலம் இன்மையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியமர்ந்தவர்களில் பலர் இன்றுவரை வீட்டுத்திட்டம் கிடைக்கப் பெறா மல் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். மீளக்குடியமர்ந்த காலத்தில் முதல் 5 ஆண்டுகளும் சொந்த நிலம் இன்மை என்ற காரணத்தினால் வீட்டுத் திட்டம் மறுக்கப்பட்ட நிலையில்
தற்போதும் அதே நிலமை நீடிப்பதாகவும் குடும்பத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.
எனினும் நிபந்தனையற்ற வகையில் ரணிலுக்கு ஆதரவு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு என கிளிநொச்சியின் நாட்டாமை எனக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த மக்கள் மீது அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.
நிரந்தரத் தொழில் இன்றி கூலிவேலைக்குச் சென்று குடும்பத்தை பராமரிக்கும் தலைவரால் வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களைப்போல் பல குடும்பங்கள் சொந்த நிலம் இன்மையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியமர்ந்தவர்களில் பலர் இன்றுவரை வீட்டுத்திட்டம் கிடைக்கப் பெறா மல் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். மீளக்குடியமர்ந்த காலத்தில் முதல் 5 ஆண்டுகளும் சொந்த நிலம் இன்மை என்ற காரணத்தினால் வீட்டுத் திட்டம் மறுக்கப்பட்ட நிலையில்
தற்போதும் அதே நிலமை நீடிப்பதாகவும் குடும்பத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.
எனினும் நிபந்தனையற்ற வகையில் ரணிலுக்கு ஆதரவு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு என கிளிநொச்சியின் நாட்டாமை எனக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த மக்கள் மீது அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.
Post a Comment