இந்திய முகவர்களிற்கு கம்பனின் கௌரவமாம்!


இனஅழிப்பிற்கான நீதி கோரி தமிழர் தாயகம் இன்று யாழில் மாபெரும் பேரணியினை நடத்த இந்திய உளவு அமைப்பான கம்பன் கழகமோ முன்னாள் ஒட்டுக்குழு பிரமுகர்களான வரதராஜப்பெருமாள் மற்றும் சி.தவராசாவிற்கு பொன்னடைகள் சகிதம் கௌரவம் வழங்கியது.

வுழமையாக வம்பு வளர்க்கும் தொழிலில் மும்முரமாக இருக்கின்ற கம்பன் கழகம் இம்முறை முக்கிய பிரமுகர்களாக முன்னாள் வடகிழக்கு மாகாணசபையின் முதலைமைச்சராக இருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருந்த வரதராஜப்பெருமாள் மற்றும் ஈபிடிபியின் சி.தவராசா ஆகியோரை அழைத்து கௌரவித்துள்ளது.

இன்று இக்கௌரவிப்பு நடந்து கொண்டிருந்த சூழலில் யாழ்.பல்கலைக்கழக சமூகம் இனஅழிப்பிற்கான நீதி கோரி மாபெரும் பேரணியினை நடத்தியுமிருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments