கோயில் கோயிலாக படியேறும் தமிழரசு!


வடக்கில் அதுவும் மக்கள் எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்சினையான கோயில் வீதிகள் அமைப்பு மற்றும் கோயில் கேணிகள் புனமைப்பென தமிழரசு மும்முரமாக மக்கள் பணியாற்ற தொடங்கியுள்ளது.

இனஅழிப்பிற்கான சர்வதேச விசாரணையினை முடக்கியமைக்கான நன்றியாக ரணில் அரசினால் வழங்கப்பட்ட கிராம எழுச்சி திட்டமெனும் கம்பரலிய திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 30 கோடி நிதியினில் ஏற்கனவே சுமந்திரன் பருத்தித்துறையில் கோயில் கேணி புனமைத்து வழங்க தற்போது மாவை மற்றும் சரவணபவன் இருவரும் கோயில் தேர் பவனிவர வீதி அமைத்துக்கொடுத்துள்ளனர்.

நாச்சிமார் கோயிலடி வீதியமைக்க பல மில்லியன்களை அள்ளிவீசியிருந்த இருவரும் இன்று வீதி அமைப்பினை கூட அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர்.

அண்மைக்காலமாக வீதி அமைப்பில் கூட தங்கள் பங்கிருப்பதாக காண்பித்துக்கொள்ளும் தமிழரசு ஆலயத்திற்கு வரும் பக்தர்களையும் தேர்தல் வலை வீசி இழுத்துக்கொண்டிருக்கின்றது.

No comments