மாலைதீவு கடலில் இலங்கை மீனவர்கள் கைது!


மாலைத்தீவு கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கடந்த 25ஆம் திகதி குறித்த மீனவர்கள் திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 04 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். 
இதன்போது சர்வதேச கடல் எல்லையை தாண்டி மாலைத்தீவு கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதான அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதேவேளை இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments