வெளிக்கிடும் போதே பிரச்சினை கொடுத்த எத்தியோப்பியா விமானம்!

எத்தியோப்பியாவில் நடந்த விமான விபத்தில் 157 பேர் இறந்தது உலகத்தையே உலுக்கியுள்ள நிலையில், விமானத்தை செலுத்திய மாலுமி புறப்படும் போதே சிரமப்பட்டதாகவும், தரையிறக்க முயற்சி செய்ததாகவும் முதன்மை செயல் அதிகாரி தேவல்டோ ஜெப்ரமாரியம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

விமானத்தில் சென்ற 33 நாடுகளை சேர்ந்த பயணிகள் இறந்துள்ளதோடு, அதில் நான்கு பயணிகள் ஐக்கிய நாடு சபையின் பணியாளர்கள் என்றும், 5 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்.


அதே வேளை இவ் விமான வகை தான் ஜாவாவில் நடந்த விபத்திலும் சிக்கியது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

No comments