சண்டிலிப்பாயில் பேருந்துகள் றேஸ் ஓட்டம் - ஒருவர் காயம்

யாழ்ப்பாணம்- சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இரு பேருந்துகள் போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்டபோது, தனியார் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பேருந்துக்குள் அகப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகள் தொழில் போட்டி காரணமாக றேஸ் ஓடி விபத்திற்குள்ளாகுவதும் இதனால் உயிர்கள் காவு வாங்கப்படுவதும் தொடர்கதையே.

No comments