கிளிநொச்சியில் அடிக்கல் நாட்டிய சிறிதரன்


சிறிலங்கா பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளதுடன், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கின்றாா்.

இதன்போது பிரதமர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத் திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். அவருடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சுமந்திரனும் அடிக்கல் நாட்டியுள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்றுள்ளார்.

அவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments