மூண்டது போர் எல்லைகளில் பயங்கரம் !

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள பாலகோட் வட்டாரத்திலிருந்த முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோஹலே தெரிவித்துள்ளார்.

அண்மையில், காஷ்மீர் உள்ள புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இந்தியத் துணை இராணுவப் படையினர் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் பாலகோட் தாக்குதலை நடத்தியுள்ளது.

என்றாலும், பாகிஸ்தானில் உள்ள இடத்தில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர்ப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், பதிலடியாகத் தானும் போர் விமானங்களை அனுப்பியதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷே முகமது தீவிரவாதக் குழுவின் தளபதி உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பில்லை என்றும் திரு. விஜய் கோஹலே கூறினார்.

No comments