கறுப்பு சுதந்திரதினம்: தமிழ் மக்கள் கூட்டணியும் ஆதரவு

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. 

பிரித்தானியார்களிடம் இருந்துஇலங்கைக்கு 1948 ஆம் ஆண்டுசுதந்திரம் கிடைத்தபோதும் அதன் பலாபலன்கள் தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை.மாறாகத்தமிழ் மக்களுக்கு எதிராகப்பெரும்பான்மை சிங்களமக்களைக்கொண்ட தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களினால் பல்வேறு அடக்குமுறைகளே கட்டவிழ்த்துவிடப்பட்டன. 

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன  அழிப்பு மற்றும் போர்க்குற்ற செயற்பாடுகளுக்கு இன்னமும் நீதிகிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் வீதிகளில் தொடர்ந்தும் இரவுபகலாகத் தீர்வு எதுவும் இன்றிபோராடிவருகின்றார்கள்.சட்டமுறைமைகளுக்குமாறானபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் விடுதலைசெய்யப்படவில்லை.யுத்தம் முடிந்து பத்துவருடங்கள் ஆகியும் தடைச் சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை.பலவந்தமாக தமது காணிகள் பறிக்கப்பட்டநிலையில் இராணுவமுகாம்களுக்கு முன்பாக நின்று பாதிக்கப்பட்டஎம்மக்கள் தொடர்ந்து இரவுபகலாகப்போராடிவருகின்றார்கள். 

இந்தநிலையில் யாழ். பல்கலைக்கழகமாணவர் ஒன்றியம் சுதந்திரதினம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை தமிழ் மக்களின் குரலை சர்வதேசத்திடம் ஓங்கி ஒலிக்கச் செய்து நீதி கேட்கும் வகையில் தமிழர் தாயகத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமை பொருத்தமானது. இதற்கு எமது முழுமையான ஆதரவை நாம் வழங்குகின்றோம். எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்தப்போராட்டநிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள்" என்றுதமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்  ;; தெரிவித்துள்ளார்.

No comments