நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி யாழில் நினைவு கூரப்பட்டார்

வன்னி இறுதி யுத்த நடவடிக்கையின் போது ஊடகப்பணியில் உயிரிழந்த ஊடகவியலாளர் அமரர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக யாழ். நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் பிற்பகல் 3.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

 அதனை தொடர்ந்து 3.30 இற்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் சத்தியமூர்த்தியின் நினைவுகளுடன் பேசுதல் எனும் நூல் வெளியீடு நடைபெற்றது.

யாழ்.ஊடக அமையம் மற்றும் எழுகலை இலக்கிய பேரவை என்பவை இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் ஊடக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அவரது நண்பர்கள் நினைவுரைகளை ஆற்றினார்கள்.

இறுதி யுத்த காலத்தில் அர்ப்பணிப்புடனான ஊடகப்பணியில் பங்கெடுத்திருந்த பு.சத்தியமூர்த்தி  இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

அவரது உன்னதமான ஊடகப்பணியினை கௌரவித்து விடுதலைப்புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments