கூட்டணிக்காக எனிடம் காத்து கிடக்கின்றனர், பாமகவை வம்புக்கிழுத்த சீமான்!

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில்  நாற்பது தொகுதிகளில் தமிழகத்தில் தனியாய் களமிறங்கும் சீமானின் நாம்தமிழர்கட்சி வேட்ப்பாளர்களையும் அறிவித்தது ,

தனித்து போட்டி குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது ,
தமிழகத்தின் முக்கிய கட்சிகள் உட்பட எத்தனையோ பேர் என்னைப் பார்க்க வந்தாங்க, உருக்கமா பேசி இழுத்தாங்க...‘எங்க கூட நீங்க வாங்க தம்பி. நீங்க நல்லா இருப்பீங்க.’ன்னு ஆசை காட்டி சொன்னாங்க. உடனே நான் கேட்டேன்...’நான் நல்லா இருப்பேன் சரி. இந்த நாடும் மக்களும் நல்லா இருப்பாங்களா?’ன்னு. வந்தவங்கிட்ட இதுக்குப் பதில்லை.

 சிலருக்கு கட்சியை காப்பாற்றுவதே லட்சியமா இருக்குது! அப்ப எந்த லட்சியத்துக்காக கட்சி துவங்கினாங்களாம்? இதை நான் அவங்ககிட்ட கேள்வியா கேட்கிறேன்.

 முப்பத்தைந்து ஆண்டுகளாக ஈழ விடுதலைக்காக போராடினோம். எத்தனையோ உயிர்களைப் பறிகொடுத்தோம். ஆனாலும் தனி ஈழம் அடையமுடியலை. அதுக்காக அப்படியே விட்டுட்டுப் போயிட்டோமா என்ன? இப்பவும் போராடுறோம், இன்னும் சாக தயாராகத்தானே இருக்கிறோம்?

என்னுடைய பாதை பக்த்சிங் பாதைதானே தவிர பா.ம.க. பாதையில்லை என ராமதாஸையும் வம்புக்கிழுத்து பதிலளித்தார் .

No comments