இந்திய உளவாளியை விடுவிக்கின்றது இலங்கை?


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய றோ உளவுப்பிரிவின் அதிகாரி மீதான குற்றச்சாட்டுக்களை அரசு விலக்கிக்கொண்டுள்ளது.இதனையடுத்து தற்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையை விடுவிக்குமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் ஜயந்த டயஸ் நாணாயக்கார, இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

இந்தியப் பிரஜைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்போவதில்லை என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டதை அடுத்தே, அவரை விடுவிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும், உரிய விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றத்துக்காக, இலங்கைக் குடிவரவு-குடியகல்வுச் சட்டங்களுக்கமைய நடவடிக்கை எடுப்பதற்காக, எதிர்வரும 13ஆம் திகதி வரையில், அந்த இந்தியப் பிரஜை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, படுகொலைச் சதி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பயங்கரவா விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வாவின் விளக்கமறியல், எதிர்வரும் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments