வடமாகாணசபையில் திரும்பிப்பறித்து ஒரு நாடகம்?


வடக்கு மாகாண சபையிலிருந்து ஊழல் மோசடி காரணமாக அடித்து விரட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தானே வடக்கில் சுகாதாரத்துறையினை காப்பாற்ற வந்தவரெ நாடகங்களை தொடர்ந்தும் அரங்கேற்றிவருகின்றார்.

அவ்வகையில் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு மக்களிற்கு சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ள நோயாளர் காவுவண்டிகள் மீளப்பெறப்பட்டு கையளிப்பு நாடக நிகழ்வு வடமாகாண சபை தலைமையத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியாலைகளில் கடந்த மூன்று மாதங்களில் 18 நோயாளர் காவு வண்டிகள் மத்திய அரசினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந் நோயாளர் காவு வண்டிகள் சேவையிலும் ஈடுப்பட்டு வந்துள்ளன. ஆனால் இன்று மீண்டும் ஆடம்பர நிகழ்வு நடத்தி அதனை இரண்டாவது தடவையாகவும் கையளித்த நிகழ்வு  இடம்பெற்றுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சரிற்கு சத்தியலிங்கம் விடுத்த கோரிக்கையினையடுத்து இவ்வண்டிகளை மாகாண மட்டத்தில் சிறு விழா ஒன்றினை நிகழ்த்திக் கையளிக்கும்படி கேட்டுக்கொண்டதாலேயே இன்றைய நிகழ்வு நடாத்தப்பட்டது என மாகாண சுகாதாரப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்த மீள் கையளிப்பு நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வழமை போல வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments