மாக்கந்துர மதுஷின் வீட்டில் இருந்து 5 கோடி ரூபா ரொக்கப்பணம் மீட்பு

மாக்கந்துர மதுஷின் டுபாய் வீட்டில் இருந்து 5 கோடி ரூபா ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சொந்தமான 4 வீடுகள் முற்றுகையிடப்பட்டன.

இதேவேளை டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள கோஷ்டி தலைவர் மாகந்துரே மதுஷ் மற்றும் டீ. மஞ்சுவின் உதவியாளர்கள் மூவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வத்தளையில் இன்று (07) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த ஐஸ் உள்ளிட்ட 20 போதைவில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

26, 29, 32 வயதுடைய மூவரே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை விசாரணைகளின் பொருட்டு ​போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை நேரடியாகவே கையாண்டுவரும் ஜனாதிபதி மைத்திரி, கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க அங்கீகாரம் வழங்கியவர்களைக் கண்டறியுமாறு உத்தரவிட்டார்.

நேற்றும் இன்றும் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார செயலர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோருடன் ஜனாதிபதி விசேட பேச்சு நடத்தியுள்ளார்.

No comments