நீதிமன்றுள் நுழைந்து மன்னார் நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல்!

மன்னாா் நீதிவான் நீதிமன்றுக்குள் நுழைந்து நீதிவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத் தரவு பிறப்பித்திருக்கின்றாா். 
இது தொடா்பில் மேலும் தொியவருவதாவது, 
மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று குறித்த நபர்கள் இருவரும் சென்று நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தாம் திருகோணமலை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போலி ஆவணங்களையும் சமர்ப்பித்து தாம் மன்னார் நீதிபதியை சந்திக்க வந்துள்ளதாக கோரி மன்னார் நீதவான் ரீ.சரவணராஜாவின் மெய்ப்பாதுகாவலருடன் உரையாடியுள்ளனர்.
எனினும் மெய்ப்பாதுகாவலா்கள் அதற்கு மறுப்பு தொிவித்ததுடன், அவ்வாறு சந்திக்க வாய்ப்பி ல்லை. என உறுதியாக கூறியுள்ளனா். இதன்போது நீதவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உரையாடி வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் நீதிமன்றபொலிஸார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் குறித்த நபர்களை பொலிஸார் கைது செய்து இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 
ஒருவர் தனது தீய நடத்தையின் காரணமாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் 

No comments