கிளிநொச்சியில் காணி விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இராணுவத்தினர் வசமிருந்த 39.95 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.
காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (07) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த 39.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் அவற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான 21.24 ஏக்கர் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் உரிமையாளர்களிடம் ஆளுநரால் கையளிக்கப்பட்டது.
Post a Comment