கதிரையினை விட்டு வாங்கிய யாழ்.மாநகர முதல்வர் ?


யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் தனது கதிரையில் அரச அமைச்சரெர்ருவரை இருத்தி அழகு பார்த்த விவகாரத்தை நியாயப்படுத்த தமிழரசு கட்சி முகவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.மாநகர முதல்வர் தனது நாற்காலியை தன் பதவி நிலை அடிப்படையாக கொண்டு அமைச்சருக்கு வழங்கியமையை சரியானதேயென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியென்ற வகையில் அவரது கதிரைக்கான கௌரவம் வழங்கப்படவேண்டும்.குறிப்பாக யாழ்.மாநாகரின் தந்தையென அழைக்கப்படும் முதல்வர் தனது கதிரையினை அதுவும் கௌரவத்திற்குரிய அங்கியுடன் விட்டுக்கொடுத்தமை வாக்களித்த மக்களை அவமதிப்பதுடன் விட்டு வாங்கும் அவரது மனநிலையினையே வெளிக்காட்டி நிற்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

No comments