இராணுவத்தை கொண்டு கல் உடைப்பேன்:சுரேன்!


அரசியல்வாதிகள் எதிர்க்காமல் இருந்தால் எதிர்ப்பை வரவிடாமல் செய்தால், இராணுவத்தை கொண்டே கல் உடைப்பிப்பேன்“ என ஆளுனர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் சம்பிரதாய நிமித்தமாக ஈ.பி.டி.பி அமைப்பின் பிரமுகர்களிற்கு இராப்போசன விருந்தளித்துள்ளார்;.

ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியின் பிரதானிகள் என் ஈ.பி.டி.பி தரப்பிலிருந்து பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது.

வடக்கு ஆளுனராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டதையடுத்து, அவரை சம்பிரதாய முறைப்படி டக்ளஸ் தேவானந்தா சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து, நேற்று ஆளுனர் இராப்போசன விருந்திற்கு அழைத்திருந்தார்.

தனது எதிர்கால திட்டங்கள் குறித்து ஆளுனர் இதன்போது குறிப்பிட்டார். பெண்கள் பணியிடத்தில் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டதை போல, கல்விக்குழு, முதியோர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

எனினும், அரசியல் குற்றச்சாட்டுக்களில் ஆளுனர் அக்கறை காண்பிக்கவில்லையென கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்தபோது, அதற்கான தீர்வையும் முன்வைக்கும்படி ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, முல்லைத்தீவில் பல வீதிகள் அமைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டது. “வீதிகள் அமைக்ககல் இல்லாமல் உள்ளது, ஒட்டுசுட்டான் தட்டய மலையை உடைத்து கல் எடுக்கலாம், அரசியல்வாதிகள் எதிர்க்காமல் இருந்தால் எதிர்ப்பை வரவிடாமல் செய்தால், இராணுவத்தை கொண்டே கல் உடைப்பிப்பேன்“ என ஆளுனர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தட்டயமலையில் கல் உடைக்கப்படுவதற்கு எதிராக வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அதற்கு எதிராக உள்ளூரில் தொடர் போராட்டங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments