அண்ணாந்து பார்த்து சுரேஸ் தன் முகத்தில் துப்புகிறார்


ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மாநாட்டின்போது வரலாறு சம்மந்தமான ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. அது குறிப்பாக சகோதர படுகொலைகள் குறித்து பேசும் ஆவணமாக காணப்படுகின்றது.

ஆனால் அந்த விடயத்தினை மீள..மீள.. நினைவுபடுத்துவது தமிழ் மக்கள் மனங்களில் மாறாத வடுவை விதைக்கும் ஒரு செயலாகும் என ரெலோ அமைப்பினைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,


தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் மேதகு வே.பிரபாகரனுடன் பேசும் சந்தா்ப்பத்தில் முன்னாள் ஆயுதப் போராட்ட இயங்களுடன் தமிழீழ விடுதலை புலிகள் ஒற்றுமைப்படுவதென்பது மறப்போம், மன்னிப்போம் என்பதன் அடிப்படையில் அமையவேண்டும். என கேட்டிருந்தோம். அதனை புலிகள் ஒப்புக் கொண்டாா், அதை பின்பற்றினாா்கள்,

அவ்வாறான நிலையில் மீளவும்.. மீளவும்.. அதை குறித்து பேசிக் கொண்டிருப்பது பயனற்ற ஒன்றாகும். இது சுரேஸ் பிரேமச்ந்திரன் அண்ணார்ந்து பார்த்து தனது முகத்திற்கு நேரே தானே துப்புவது போன்றது என்றாா்.

No comments