படையினருக்கு பொதுமன்னிப்பு:ஜனநாயகப்போராளிகள் கட்சி நடவடிக்கை?


இலங்கை அரசு புலிகளதும் இராணுவத்தினதும் போர்க்குற்றங்களை பொதுமன்னிப்பளிப்பது தொடர்பில் பேசி வருகின்ற நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் விடுதலைப் புலிகள் பேரில் சிலரை அங்கு அனுப்பி வைக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலரை சாட்சியமளிப்பதற்கென ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். 

“யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பான இராணுவம், விமானப்படை அதிகாரிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். விடுதலைப்புலிகள் மீது அவர்கள் அங்கு யுத்தக்குற்றங்களை சுமத்தி வருகிறார்கள். ஆனால் அதற்கு தமிழர் தரப்பிலிருந்து முறையான பதில் அளிக்கப்படவில்லை. யுத்தத்தில் ஈடுபட்ட இன்னொரு தரப்பான விடுதலைப் புலிகள் இதுவரை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று, பேசவில்லை.

இந்தநிலையில் விடுதலைப்புலிகள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் இதுகுறித்து பேசியுள்ளோம். எதிர்வரும் சில தினங்களில் இதுகுறித்த முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரணில் அரசின் சதியாகவே விடுதலைப்புலிகள் பேரில் சிலரை ஜெனீவா அனுப்பி புலிகளிற்கு பொதுமன்னிப்பளித்தது போன்று படையினருக்கும் பொதுமன்னிப்பளிப்பதை நியாயப்படுத்த சதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிவரும் ஜனநாயகப்போராளிகள் கட்சியையே ரணில் தரப்புடன் இணைந்து புதிய பொறிக்குள் சிக்க வைக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு;ள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. 

No comments