கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் இளங்குடும்பஸ்தர் சடலம்?


கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் குளமொன்றின் அருகே இளங்குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தருமபுரம் மேற்கு 6 யூனிட்டை சேர்ந்த 28 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌவுரியானந்தம் என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தருமபுரம்; 2ஆம் யூனிட் குளத்தடியில்  இன்று வெள்ளிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன்  அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

No comments