இம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி?


வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டதற்கும் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் தலைவருக்கும் தொடர்பில்லையென சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிவசக்தி ஆனந்தன் பொய் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படாமல் வவுனியாவில் உள்ள சிங்கள பிரதேசத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து கூறியிருக்கிறார். 

ஆனால் உண்மை அதுவல்ல, சிவசக்தி ஆனந்தன் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அப்பட்டமான பொய்களை கூறிக் கொண்டிருக்கின்றார்.. 2016ம்  ஆண்டு மே மாதம் 10ம் திகதி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு 26 மாகாணசபை உறுப்பினர்கள் இணங்கியிருந்தனர்.ஆனால் பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆகியோர் தாண்டிக்குளம் பகுதியில் காணியை விடுவிக்க முடியாது. என கூறியிருந்தனர்.. இதன் பின்னரான விவாதங்களினடிப்படையில் ஓமந்தையா? தாண்டிக்குளமா? என தீர்மானிப்பதற்காக முதலமைச்சர் ஒரு வாக்கெடுப்பை மாகாணசபைக்கு வெளியே நடாத்தியிருந்தார். 

அதில் பெரும்பான்மை வாக்குகள் ஓமந்தைக்கு கிடைத்ததால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவி க்கப்பட்டிருந்தது. இடையில் ஓமந்தையா? தாண்டிக்குளமா? என இடம்பெற்ற விவாதங்களினால் குழப்பங்கள் இருந்திருந்தன. ஆனால் சிங்கள பிரதேசங்களை அண்டி பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. 

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் கூட இந்த விடயத்தில் மாகாணசபை தங்களுக்குள் பேசித்தீர்த்;துக் கொள்ளட்டும் என கூறினாரே தவிர அதில் தலையீடுகள் எதனையும் செய்யவில்லை.
இந்நிலையில் ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் எவ்வாறு வவுனியாவில் சிங்கள பிரதேசத்தை அண்டி அமைக்கப்பட்டது என்பது எமக்கு தெரியாதெனவும் சீ.வீ.கே தெரிவித்துள்ளார். 

No comments