சிலாபத்தில் பேருந்து விபத்து - நால்வர் பலி 19 பேர் படுகாயம்


சிலாபம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வண்டரஹ தனியார் பஸ் ஒன்று சிலாபம் – மஹாவெவயில் இன்று அதிகாலை மின்மாற்றி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 19 பேரும் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments