சந்திரனில் குடியிருப்புகளைக் நிர்மாணிக்க சீனா தேசிய வெண்வெளி நிர்வாகத்துடன் கைகோர்கிறது நாசா

சந்திரனில் மனிதர்களை குடியமர்த்துவதற்கு சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.

சந்திரனில் தீவிர ஆய்வினை மேற்கொண்டு வரும் சீனா, சந்திரனின் இருட்டு பகுதியை ஆராய்ச்சி செய்ய ‘சாங்-இ 4’ என்ற விண்கலத்தை அண்மையில் அங்கு அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் இம்மாத தொடக்கத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் சந்திரனில் மீண்டும் தனது ஆய்வை தொடங்க ஆர்வங் கொண்டுள்ளது. இந் நிலையில் அதை சீனாவுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனையை சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் சமீபத்தில் ‘நாசா’ நடத்தியது.

இதன்போது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பூமியில் இருந்து வேறு கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments