கடற்படை கொன்ற மீனவரின் இறுதிச்சடங்கு!


தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக  கடல்வழியாக தாயகம் திரும்ப முற்பட்ட நால்வர் கைதாகியுள்ளனர்.இவர்கள்  யாழ்ப்பாணம் வருகை தர முற்பட்ட நிலையிலேயே கைதாகியுள்ளனர்.

இதனிடையே இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய மீனவர் முனுசாமியின் இறுதிக்கிரியைகள் தமிழ்நாடு ஜகதாப்பட்டணத்தில் நேற்று நடைபெற்றிருந்தது.

முன்னதாக இலங்கை கடற்படையினரைக் கண்டித்தும், பலியான மீனவருக்கு நிவாரணம் வழங்க வழியுறுத்தியும்,கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி  இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 11ம் திகதி  மீன்பிடிக்கச் சென்ற  இரண்டு படகுகளை நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல் மூலம் மோதி படகுகளை  மூழ்கடித்ததைக் கண்டித்தும்,இச்சம்பவத்தால் பலியான மீனவர் முனியசாமிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,  குடும்ப வறுமையால் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் உள்ப்பட 19மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க  வழியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டிருந்தமை தெரிந்ததே.

No comments