மைத்திரியின் காணி விடுவிப்பு அதோ கதியானது?


யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை இன்று 21ம் திகதி திங்கட்கிழமை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்த போதும் இராணுவம் மக்களை காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் தமது காணிகளை மீட்க வந்த காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வடக்கில் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை இன்று 21ம் திகதி திங்கட்கிழமை மீள மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைதீவில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதன்படி யாழ்.வலிகாமம் வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஒட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் யாரையும் இராணுவம் அவர்களது காணிக்குள் செல்ல அனுமதித்திருக்கவில்லை.

சுமார் மாலை 4 மணிவரை மக்கள் காத்திருந்த நிலையில், குறித்த காணிகள் நாளையே விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

No comments