புதூர் காட்டினுள் சுற்றிவளைப்பு?

வன்னியின் புதூர் காட்டுப்பகுதியை இலக்கு வைத்து இன்று காலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

காட்டுக்குள் வெடிபொருட்கள் இருப்பதாக சந்தேகித்து கனகராயன் குளம் குறிசுட்ட குளத்தை அண்டிய பகுதிகள் மற்றும் புதூர் ஏ-ஒன்பது சாலைகள் இராணுவம் மற்றும் பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் சுற்றிவளைப்பில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டமையால் அது குறித்து மக்களிடையே பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.

No comments