யாழ் மானிப்பாய் வீதியில் விபத்தில் சிக்கி முதியவர் பலி

யாழ் மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆறுகால்மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் விஜயராசா என்ற முதியவரே உயிரிழந்தவராவர்.

குறித்த முதியவர் மானிப்பாய் வீதி ஆறுகால்மடப் பகுதியில் சிறு வியாபார நிலையம் ஒன்றினை நடத்தி வருபவர் எனவும்,  இன்று (02) காலை வழமை போன்று வீட்டில் இருந்து தனது வியாபார நிலையத்தை திறப்பதற்காக நடந்து சென்று வீதியை கடக்க முற்பட்ட போது, யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய் நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதித் தள்ளியுள்ளது.

இதனால் வீதியில் தூக்கி எறியப்பட்ட முதியவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments