நமக்கு நாமே திட்டத்தை தொடங்கினார் சுமந்திரன்!


டக்ளஸினை தொடர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது குறளி வித்தைகளை தமிழர் பிரதேசங்களில் அரங்கேற்ற தொடங்கியுள்ளார்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பினை கூட கைவிட ரணில் தீர்மானித்துள்ள நிலையில் டக்ளஸ் பாணி சலுகை அரசியலை கூட்டமைப்பு களமிறங்கியுள்ளது.எந்த சலுகை அரசியலை விமர்சித்து கூட்டமைப்பின் அரசியல் பயணம் முன்னெடுக்கப்பட்டதோ தற்போது அதே சலுகை அரசியலுடன் கூட்டமைப்பின் பயணம் ஆரம்பமாகியுள்ளது.

மைத்திரி,ரணில் சகிதம் தமக்கு தாமே விளம்பர பலகைகளை வைத்து திறந்து வைக்கின்ற நாடகத்தை சுமந்திரன் ஒரு பக்கம் தொடர்கின்றார்.மறுபுறம் தனது எடுபிடிகள் சகிதம் தன்னை தானே வரவேற்கின்ற நிகழ்வையும் நடத்துகின்றார்.

வடமராட்சி மக்கள் பெயரில் மாலைகள் மரியாதைகளை அவர் பெற்றுக்கொண்டாலும் வருகை தந்தவர்கள் ஒரு சில நூறு பேரளவிலேயே என்கின்றன தகவல்கள்.

அரசியல் தீர்;வு சதி மக்களுக்கு புரியத்தொடங்கியதால் அம்பலப்பட்டு வருகின்ற சுத்துமாத்துமந்திரன், தன்னை மீண்டும் பிரபல்யப்படுத்தும் நோக்கில் அடிபொடிகள் மூலம் டக்ளஸ் பாணியிலான பாராட்டி வாழ்த்துகிறோம் விழாவை  நடாத்திவருகிறார் என்கிறனர் அவதானிகள்.

வடமாராட்சியில் இன்று சுமந்திரனை; அவரது அடிபொடிகள் ஏற்பாடு செய்து வரவேற்ற “மாபெரும் “ பாராட்டிவாழ்த்துகிறோம் ஊர்வலத்தில் வெறும் 43பேர் மட்டுமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments