சுமந்திரனின் கனவு பலிக்காது

வடமாகாண மக்களால் வெறுக்கப்படும் ஒருவராக மாறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனின் கனவு ஒரு போதும் பலிக்காது என நாடாளுமன்ற உறுப்பினா் சேஹான் சேமசிங்க கூறியுள்ளாா்.

இது தொடா்பில் மேலும் அவா் கூறுகையில், புதிய அரசியலமைப்பின் வரைபினை மட்டுமல்ல அதன் யோசனைகளையும் கடுமையாக எதிர்ப்போம். அத்துடன் நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பினை உருவாக்க

முயலும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இன்று வடக்கு மக்களால் வெறுக்கப்பட்டவராக காணப்படுகின்றார் எனவும் அவரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

மேலும் புதிய அரசியலமைப்பினை கோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இதுரையில்

தமது எதிர்கட்சி பதவியை பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்த அவர் வடக்கு மக்கள் புதிய அரசியலமைப்பை கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments