வடக்கு உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கு இன்று ஆளுநர் நியமனம் ?

வடக்கு மாகாணம் உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கான  புதிய  ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ, தென் மாகாணம், ஊவா, வட மாகாணங்களுக்கே இவ்வாறு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய 9 மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகிய நிலையில், 5 மாகாணங்களுக்கு மாத்திரம் கடந்த வௌ்ளிக்கிழமை (4) ஜனாதிபதி புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.

குறித்த 5 மாகாணங்களுக்கும்  புதிய ஆளுநர்களே நியமிக்கப்பட்ட நிலையில், ஏனைய நான்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments