ரெஜினோல்ட் குரேயின் இரத்தம் தமிழ் இரத்தமாம்?


வடமாகாண ஆளுநராக கடமையாற்றி தற்போது தூக்கியடிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினை அவரது பெரும்பாலான எடுபிடிகள் கைவிட்டு தற்போது புதிய ஆளுநர் பக்கம் பாய்ந்துவிட்டனர்.எனினும் ஒருசிலரோ நன்றி மறவாது அவரையும் மனைவியையும் அழைத்து யாழில் கௌரவித்துள்ளனர்.

தமிழர்களது உடலில் சிங்கள இரத்தமே ஓடுவதாக அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்பவராக ரெஜினோல்ட் குரே இருந்திருந்தது தெரிந்ததே.அவ்வகையில் தமது உடலில் ஓடுவது சிங்கள இரத்தமேயென்பதை அன்புடன் நினைவுகூர்ந்து அவரை கௌரவித்துள்ளனர்.

வழமையாக தன்னை கௌரவிக்கின்ற நிகழ்வுக்களில் பாடல்களை பாடுவது ரெஜினோல்ட் குரேயின் வழக்கம் ஆகையால் இம்முறையும் பாட்டுடன் இரவிரவாக கொண்டாட்டங்கள் நடந்திருந்தது.

இதனிடையே தனக்கெதிராக சதி செய்ததாக குற்றஞச்சாட்டி ரெஜினோல்ட் குரேயினை மைத்திரி தூக்கியடித்திருந்த போதும் தற்போது இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக ரெஜினோல்ட் குரேயினை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments