பொதுஜன முன்னணிக்கு மகிந்ததான் வழிகாட்டியாம்

மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணி செயற்படும் என்று அந்தக் கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர்,

“மகிந்த ராஜபக்சவின் பின்னணியுடனேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணி உருவாக்கப்பட்டது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதையே சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பார்த்திருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொதுஜன முன்னணியில் கடந்த நவம்பர் மாதம் இணைந்து கொண்டதாக அறிவித்த மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதை அடுத்து, தாம் அந்தக் கட்சியில் இணையவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments