ரெஜினோல்ட் குரேதான் வேண்டுமாம்??

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ரெலோவிலிருந்து பிரிந்த கணேஷ் வேலாயுதத்தின் சிவன் அறக்கட்டளை நிறுவனம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (7) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சாவகச்சேரி சமூர்த்தி பயனாளிகள், சித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழ் மொழி பேசக் கூடியவராக இருந்தமையால் தமது தேவைகளை உடனடியாக தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும் மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி மூன்று மகஜர்களை யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தெய்வேந்திரம் சுகுணரதியிடம் கையளித்தனர்.

No comments