விஜயகலாவிற்கு கால அவகாசம்?


விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விஜயகலா புலம்பிய விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச விழா ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக விஜயகலா மகேஸ்வரன் மீது தொடரப்பட்ட வழக்கு பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மீண்டும் அது ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக விஜயகலா மகேஸ்வரனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பின்னராக ரணிலின் ஒட்டுமொத்த அமைச்சரவையுமே கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments