வவுணதீவு கொலை பொட்டம்மான் அணியென்கிறார் கருணா!


மட்டக்களப்பில் இரண்டு காவல்துறையினரை கொலை செய்தது பொட்டு அம்மான் என கருணா கண்டுபிடித்துள்ளார்.இதனை தென்னிலங்கை ஊடகங்களிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துமுள்ளார்.

பொட்டம்மான் நோர்வேயில் இருக்கிறார் என்று கருணா தெரிவித்துள்ளநிலையில் மட்டக்களப்பில் இரண்டு இலங்கை காவல்துறையினர் கொல்லப்பட்டவுடன் தன்மீது அந்த பழி விழுவதை தவிர்ப்பதற்காக இதை கூறியிருக்கிறார் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகள் மீண்டும் பொட்டம்மான் தலைமையில் இயங்குவதாகவும் அவர்களே இந்த இரண்டு காவல்துறையினரையும் கொன்றதாக கருணா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கோத்தபாயா “புலிகள் இருக்கிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய உதவுவதுடன் மகிந்த ராஜபக்ச இதனைக் காட்டி தேர்தலில் தொடர்ந்து வெல்ல வழி செய்கிறது.அத்துடன் ஜ.நா வில் புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள் என்றும் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த இடம் அளிக்கிறதென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே கருணாவே இக்கொலைகளை செய்ததாக கூட்டமைப்பும்,ஜக்கிய தேசியக்கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments